அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 07, 2013

திடீரென்று வந்தவன் (சிறுகதை)

-இமயத்தலைவன்

காலை ஆறு மணிக்குக் கதவைத் தட்டுவது யாராயிருக்கும் என்று  அதிர்ச்சியோடு கதவைத் திறந்தான் குமார். வாசலில் ஒரு வாலிபன். கையில் சூட்கேசும் முதுகில் லேப்டாப் பையுமாக தமிழ் நாட்டு ஆசாமி. விமானப் பதிவு அட்டைகள் சூட்கேசில் தொங்கிக் கொண்டிருந்தன. “ஹாய்...குட் மாணிங். ஐ ஆம் சிவா” என்றான்.

புதன், செப்டம்பர் 11, 2013

ஊன்றுகோல் நானுனக்கு (சிறுகதை)

ஊன்றுகோல் நானுனக்கு (சிறுகதை)
இமயத்தலைவன்

“புதுமையாக இருக்குமாமே!” என்றாள் சுமித்ரா.

“ஆம். அது ஒரு பஸ் தான், ஆனால் வாத்து போல தரையிலும் தண்ணீரிலும் போகும். அதனால் தான் ‘டக் டூர்’ என்கிறார்கள். சக்கரம் வைத்த படகு மாதிரி இருக்கும். இரண்டாம் உலகப்போரில் ராணுவத்திற்காகச் செய்த வண்டி, யுத்தம் முடிந்த பிறகு சுற்றுலாவுக்கு விட்டு விட்டார்கள்” என்றாள் எலைன்.

திங்கள், ஆகஸ்ட் 26, 2013

கண்ணே கலைமானே (சிறுகதை)

கண்ணே கலைமானே
இமயத்தலைவன்

நியூஜெர்சியில் பிரபலமான  உயர்நிலைப்பள்ளி அது. இரண்டாவது, மூன்றாவது கிரேடு மாணவர்களின் பெற்றோர்கள் குழுமியிருந்தனர். வரப்போகும் ஆண்டு விழாவை வித்தியாசமாகக் கொண்டாடுவதற்கான கருத்துக் கேட்கும் கூட்டம்.  

இரண்டாவது படிக்கும் சகுந்தலா என்கிற ‘ஷக்’ குடன் தாயார் இந்திராவும், ‘அமெரிக்கால பள்ளிக்கூடம்னா எப்படி யிருக்கும்னு பாக்கணும்’ என்று பாட்டி ராஜம்மாவும் வந்திருந்தனர்.

பள்ளி முதல்வர் மிஸ். சாம்சன் அனைவரையும் வரவேற்றார். “இந்த வருடம் ஆண்டு விழாவிற்கு நமது கவர்னரை அழைப்பதாக இருக்கிறோம். அதனால் விழா மிகவும் சிறப்பாக மட்டுமின்றி வித்தியாசமாகவும் இருக்கவேண்டும். அதற்கான ஆலோசனைகளை வரவேற்கிறேன்” என்றார்.