பதினொன்றாம் வகுப்பு
தேறியவுடன் கல்லூரியில் சேர வேண்டுமென்று கனவு கண்டேன். ஆனால் நம்பிக்கை
கொள்ளவில்லை. காரணம் இராணிப்பேட்டையில் கல்லூரி எதுவும் இல்லை. ஒரு மணிநேரம்
பயணித்தால் வேலூரில் ‘ஊரீஸ்’ என்னும் பழம்பெரும் கல்லூரி இருந்தது. ஆனால் தினசரிப்
பயணம் செய்யவும் தனியார் கல்லூரிக்கான கட்டணம் செலுத்தவும் வசதியிருக்கவில்லை.
இராணிப்பேட்டையும்
அதன் அருகிலுள்ள மேல்விஷாரம், வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி,
கிருஷ்ணகிரியும் முஸ்லீம் ஜனத்தொகை அதிகம் கொண்ட ஊர்களாகும். இராணிப்பேட்டையிலும்
குடியாத்தத்திலும் அப்போது எண்ணற்ற பீடித் தொழிற்சாலைகள் இருந்தன. பீடி இலைகளைத்
தொழிற்சாலையிலிருந்து பெற்று அதை பீடியாகச் சுற்றுவதும், அந்த பீடிக்கு மேல்
‘மஹாராஜா பீடி’ ‘ஜாடி பீடி’ போன்ற லேபிள்களை ஒட்டுவதும் ஏழைகளின் இரண்டு முக்கிய
தொழில்கள்.