அன்னையின் தரிசனம்
![]() |
| குழந்தையாக ஸ்ரீ அன்னை படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் |
அன்று அன்னை-அரவிந்தர் சமாதியைத் தரிசனம் செய்பவர்களுக்கு ஆன்ம விழிப்புணர்ச்சி மிக இயல்பாக வரும் என்றும், அன்றைய தினம் அறிவு-செல்வம்-பதவி இந்த மூன்றிலும் எந்த நிலையில் உள்ளார்களோ அதைவிடப் பல படிகள் முன்னேறுவதற்கான உழைப்பையும், ஊக்கத்தையும், உரிய சூழ்நிலைகளையும் அன்னையின் அருள் அடுத்துவரும் நாட்களில் வாரிவாரி வழங்கி வாழ்க்கையை வெற்றிகரமாக்கும் என்றும் குருநாதர் சொன்னதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
(அன்னை தியான மையங்களில்
பாடுவதற்காக 1994 இல் நான் எழுதிக்கொடுத்த
பாடல் இது. படங்கள் அனைத்தும் ஆசிரமத்தின் விறபனையில் பெறப்பட்டவை. இவற்றின் பதிப்புரிமை ஆசிரமத்தைச் சேர்ந்ததாகும்.)
துளசி மணம்
கொலு விருக்கும்.
தூய மலர்க் கூட்டம்
தொழுது பணிந்து
சுகந்த மணம் பரப்பும்.
வார்த்தை ஒடுங்கும்
மௌனம் லயிக்கும்.
எண்ணம் அடங்கும்
இதயம் லேசாகும்.
அன்னையுடன் அரவிந்தர்
ஆழ்ந்த சமாதியிலே
அருகில் வந்தவர்க்கும்
ஆன்மா விழிப்படையும்.
காலத்தால் கட்டுண்ட
கர்மவினை அழியும்.
கண்கள் ஒளியேறும்.
வாழ்க்கைச் சிக்கல்கள்
வாசலிலே நின்றுவிடும்.
நெஞ்சம் இனிக்கும்
தியானம் நிலைத்துவிடும்.
****
அடிக்கடி உனைக்காணும் வரம் வேண்டும் – அம்மா
அழியாமல் நெஞ்சில் உன் அருள் வேண்டும்!
படிக்கொரு துணையாய் நின் பதம் வேண்டும் –
உன்னைப்
பாடும் பணியே நிதம் வேண்டும்! – அம்மா! (அடிக்கடி)
![]() |
| மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே! -கங்கை அமரன் பாடல் படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் |
திசைஎல் லாம் உன் துணை வேண்டும்- நல்ல
சேதியே என்னைச் சேர வேண்டும்-அம்மா
கைகுவித்து உனை வேண்டும் மனம் வேண்டும்- திருக்
கதவம் திறந்து தரி சனம் வேண்டும்! –அம்மா!
-
இராய செல்லப்பா (இமயத்தலைவன்)
![]() |
| 2004 ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது. படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் |
![]() |
| 1999 ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் |
![]() |
| 2000 ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் |
![]() |
| 2007 ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் |
Email: chellappay@yahoo.com
தகவல்: சென்னை - நந்தனத்திலுள்ள - அமரர் ஆனந்தபாலா என்ற ஆர். பாலசுப்பிரமணியம் அவர்களால் துவங்கப்பட்டு -1986 முதல் தொடர்ந்து பக்தியோடு இயங்கிவரும் - ஸ்ரீ அன்னை தியான மையம் - நாளை - பிப்ரவரி 21 - அன்னை பிறந்தநாளை முன்னிட்டு காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். கட்டணம் ஏதுமில்லை. அனைவரும் வரலாம் - சிறு குழந்தைகள் உள்பட. )











