![]() |
| பால்டிமோரில் நிற்கும் பழைய கப்பல் |
இரவு பதினோரு மணிக்கு விடுதிக்குத் திரும்பி, தொலைக்காட்சிப் பெட்டியை திருகிய உடன், பாஸ்டன் (Boston) மாரத்தானின் போது வெடிகுண்டு வைத்ததாகத் தேடப்பட்டு வந்த 19 வயது இளைஞன் ஸோக்கர் ஸர்ணயேவ் (Dzhokhar Tsarnaev) பிடிபட்டுவிட்ட செய்தி வெளியாகிக்கொண்டிருந்தது. அவனை ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூடிய படகினுள்ளிருந்து பிடித்தார்களாம். கழுத்திலும் காலிலும் குண்டுபட்டிருந்ததால் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிட்டார்களாம். 24 மணி நேரமாக ஊரடங்கு சட்டத்தின் கீழிருந்த பாஸ்டன் நகரம், குற்றவாளி பிடிபட்டுவிட்டதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. பொதுமக்கள் தெருவில் திரண்டு வந்து கொண்டாடியதைக் காட்டினார்கள்.
