ஆலப்பாக்கம்-அஞ்சலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலப்பாக்கம்-அஞ்சலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 12, 2013

ஆலப்பாக்கம் அஞ்சலை -2

இவ்வரிசையில் இதற்கு முந்தைய பதிவு:
ஆலப்பாக்கம் அஞ்சலை-1

தலித்துகளுக்கு எதிரான இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது ஆயிரம் பேர் என்று அடுத்த நாள் செய்தித்தாள்களில் வந்தது. திட்டமிட்ட சதி என்பதை புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். தலித்துகளின் வீடுகள் அடையாளமின்றி தரைமட்டமாகிவிட, அருகிலிருந்த மற்றவர்களின் வீடுகள் துளியும் பாதிக்கப்படாமல் இருந்தது எப்படி என்று கேள்வி எழுப்பின. நாடெங்கிலும் இருந்து தலித் தலைவர்கள் ஆலப்பாக்கத்தில் முகாமிட ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும் தீயினால் பாதிக்கப்படாத வீடுகள் கட்டித்தரக் கோரியும் சாலை மறியல்கள் தொடர்ந்து நடைபெறலாயின.


தப்பி ஓடிய தலித்துகள் மீண்டும் வந்தால் மறுபடியும் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியதால், தீயில் மாண்டு போனவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் பொறுப்பை அரசாங்கமே எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. நிரந்தரமாக ஒரு போலீஸ் படை அவ்வூரிலேயே நிறுத்தப்பட்டது.

ஆலப்பாக்கம் அஞ்சலை - 1

வெயிலுக்கு முன் கிளம்பவேண்டும் என்று எவ்வளவு முயற்சித்தாலும் முடிவதில்லை. பஸ் நிலையம் வருவதற்குள் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. நல்ல வேளை, கடலூர்-சென்னை ’பாயிண்ட் டு பாயிண்ட்’ பஸ் கிடைத்துவிட்டது. மூன்றரை மணி நேரத்தில் சைதாப்பேட்டை போய்விடும்.

‘ஜன்னலோரம் உட்காருகிறீர்களா?‘ என்று பலத்த மரியாதையோடு கேட்டார், 16 ஆம் எண் இருக்கைக்காரர். எனது எண் 15. சரி என்றேன். ஜன்னலோரம் அமர்ந்த பிறகு தான் உறைத்தது, ரைஸ் குக்கரிலிருந்து அடிக்கிற ஆவி மாதிரி அனல் காற்று என்மீது அடுத்த மூன்றரை மணி நேரம் அடிக்கப் போகிறதென்ற உண்மை. என் மனைவி அடிக்கடி சொல்வது சரியாகத்தான் இருக்குமென்று தோன்றியது. (‘உங்களுக்கு ‘அது’ கொஞ்சம் போதாது’). பெண்களுக்கு எப்போதுமே உள்ளுணர்வு அதிகம்.