இவ்வரிசையில் இதற்கு முந்தைய பதிவு:
ஆலப்பாக்கம் அஞ்சலை-1
தலித்துகளுக்கு எதிரான இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது ஆயிரம் பேர் என்று அடுத்த நாள் செய்தித்தாள்களில் வந்தது. திட்டமிட்ட சதி என்பதை புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். தலித்துகளின் வீடுகள் அடையாளமின்றி தரைமட்டமாகிவிட, அருகிலிருந்த மற்றவர்களின் வீடுகள் துளியும் பாதிக்கப்படாமல் இருந்தது எப்படி என்று கேள்வி எழுப்பின. நாடெங்கிலும் இருந்து தலித் தலைவர்கள் ஆலப்பாக்கத்தில் முகாமிட ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும் தீயினால் பாதிக்கப்படாத வீடுகள் கட்டித்தரக் கோரியும் சாலை மறியல்கள் தொடர்ந்து நடைபெறலாயின.
ஆலப்பாக்கம் அஞ்சலை-1
தலித்துகளுக்கு எதிரான இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது ஆயிரம் பேர் என்று அடுத்த நாள் செய்தித்தாள்களில் வந்தது. திட்டமிட்ட சதி என்பதை புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். தலித்துகளின் வீடுகள் அடையாளமின்றி தரைமட்டமாகிவிட, அருகிலிருந்த மற்றவர்களின் வீடுகள் துளியும் பாதிக்கப்படாமல் இருந்தது எப்படி என்று கேள்வி எழுப்பின. நாடெங்கிலும் இருந்து தலித் தலைவர்கள் ஆலப்பாக்கத்தில் முகாமிட ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும் தீயினால் பாதிக்கப்படாத வீடுகள் கட்டித்தரக் கோரியும் சாலை மறியல்கள் தொடர்ந்து நடைபெறலாயின.
தப்பி ஓடிய தலித்துகள் மீண்டும் வந்தால் மறுபடியும் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியதால், தீயில் மாண்டு போனவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் பொறுப்பை அரசாங்கமே எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. நிரந்தரமாக ஒரு போலீஸ் படை அவ்வூரிலேயே நிறுத்தப்பட்டது.