சனி, நவம்பர் 02, 2013

தெய்வக் குற்றத்தைத் தவிர்க்கச் சில புகைப்படங்கள்

தீபாவளித் திருநாளிலும் எழுதியே 'போர்' அடிப்பது தெய்வக்குற்றம் ஆகலாம் என்பதால் இன்று நான் எடுத்த (நானே எடுத்த!) சில புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

அரவிந்தர் - டில்லி ஆசிரமத்தில்

 
         பூனை குறுக்கே போவது-சென்னை 'உதவும் கரங்கள்' திருவேற்காடு


    குளு-மணாலி வழியில் வெந்நீர் ஊற்றில் சோறு சமைக்கும் காட்சி


             குளு-மணாலி வழியில் எதிரும் புதிருமாக லாரிகள்

    அதே வழியில்: தலையைத் தொடும் மரங்கள், வானைத் தொடும் மலைகள்
                   
                                சண்டிகர் - கல் தோட்டம் (முதுகு என்னுடையது!)


                           சண்டிகர் - கல் தோட்டம் - இன்னொரு காட்சி

                       தாஜ்மஹாலில் இருந்து பார்த்தால் யமுனை நதி


                உள்ளிருந்து அண்ணாந்து பார்த்தால் - தாஜ்மஹால்

                                                       திருச்செந்தூர் -2004 இல்
                              திருப்பதி மலை- நடைபாதையில் மான்கள்


மாலையில் - பனிப்படலத்தின் நடுவே டில்லி சூரியன்
 
அதே மாலையின் இன்னொரு தோற்றம்

குடையில் ஒரு குடித்தனம்? மும்பை நாரிமன் பாயிண்ட்டில்

ஹரித்வார் போகும் வழியில் ஒரு காட்சி

 (c) Y Chellappa
email: chellappay@yahoo.com

39 கருத்துகள்:

  1. அருமையான படங்கள்....பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி, இராஜேஸ்வரி அவர்களே! கங்காஸ்நானம் ஆயிற்றா?

      நீக்கு
  2. அருமையான படங்கள் .வாழ்துக்கள்!!!நன்றி.

    பதிலளிநீக்கு

  3. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் இனிக்கும் தமிழ்க்கவிதையும் இத்தீபாவளித்திருனாளைப் பெருமைப்படுத்திவிட்டன, ஐயா!

      நீக்கு
  4. இன்னும் நிறைய வெளிநாட்டுச் சுற்றுலா படங்களையும் பதிவிடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் தங்கள் வேண்டுகோள் நிறைவேற்றப்படும். நன்றி.

      நீக்கு
  5. அன்புள்ள ஐயா..

    நல்ல கவித்துவமான படங்கள். எதார்த்தமும் ரசனையும் இழையும் படங்கள். அதேசமய்ம் நல்ல கலைஞனின் நேர்த்திமிகு படங்கள். மனிதாபிமானம் கொஞ்சும் படங்கள். இப்படி பல எண்ணங்கள் படங்களைப் பார்க்கையில் தோன்றுகின்றன. அருமை. அற்புதங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயய்யோ, தங்கள் பாராட்டுக்கு நான் தகுதியுடையவன் அல்லன். ஏனெனில் இப்புகைப்படங்கள் சாதாரண காமிராவினால் எத்தகைய முன்னேற்பாடும் இன்றி எடுக்கப்பட்டவை. ரசிக்கும்படி அமைந்துவிட்டிருந்தால் அது இயற்கையின் வரமேயன்றி வேறல்ல. தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. ஆயிரம் சொற்கள் விளக்க முடியாததை ஒரு படம் விளக்கி விடுகிறது. இங்கே இத்தனை படங்கள்....

    பதிலளிநீக்கு
  7. புகைப்படங்களைப் பார்த்தேன், ரசித்தேன். ஒரே நேரத்தில் பல இடங்களைப் பார்த்தமை மனதிற்கு மகிழ்வளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    கண்கவர் படங்கள்...அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. உள்ளங்கவர் படங்கள்.இளமையின் துள்ளல் முதுமையிலும் .பல்லாண்டு

    பதிலளிநீக்கு
  10. கவித்துவமான அற்புதமான
    புகைப்படங்கள்
    பயண அனுபவங்கள் குறித்த
    பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  11. அன்புடையீர்!..

    //புகைப்படங்கள் சாதாரண காமிராவினால் எத்தகைய முன்னேற்பாடும் இன்றி எடுக்கப் பட்டவை.//

    தாங்கள் என்ன சொன்னாலும் சரி!.. அனைத்தும் அருமை!.. இயற்கை அழகை கண் முன் காட்டிய்மைக்கு மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  12. தெய்வக் குற்றத்தைத் தவிர்க்க வெளியிட்டுள்ள புகைப் படங்கள். அழகு அருமை. சண்டிகர் கல் தோட்டத்தில் நீங்களே உங்கள் முதுகை எடுத்த படம் சூப்பர்..........!

    பதிலளிநீக்கு
  13. //தலையைத் தொடும் மரங்கள், வானைத் தொடும் மலைகள்//

    கவித்துவமான தலைப்பு.

    படங்களையும் இரசித்தேன். அவைகளுக்கான தலைப்புகளையும் இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. உங்கள் பதிவு எங்கே எங்கே என்று அலைந்து கொண்டிருந்தபோது ஜி.என். பி.சாருக்கு உங்கள் பதில் மூலம் வந்தடைந்தேன்.

    பதிவர் மா நாட்டில் சந்தித்தபின் பேச சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

    போட்டோக்கள் மிக நன்றாக உள்ளன.

    அந்த குளு மனாலி லாரிகள் என்ன ஆயின ?

    அங்கேயே இன்னமும் நிற்கின்றாவா ?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் குளு-மணாலி லாரிகள் தினந்தோறும் அங்கேயே நின்று எதிரும் புதிருமாகப் பார்த்து, தென்னிந்தியாவிலிருந்து வருபவர்களைத் திகைக்கவைத்துக் கொண்டிருப்பதாகப் பட்சி சொல்கிறது. நிற்க, தங்கள் தொலைபேசி எண் கிடைக்காததால் தொடர்பு கொள்ள இயலவில்லை. எனது எண்தான் தங்களுக்குத் தெரிந்துவிட்டதே! பேசலாமே! திரு ஜிஎன்பி அவர்கள வரும்போது சந்திக்கத் தங்களுக்கு வசதிப்படுமா? தெரிவியுங்கள். அன்புடன்: இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

      நீக்கு
  15. அந்தக் குளு-மணாலி லாரிகள் தினந்தோறும் அங்கேயே நின்று எதிரும் புதிருமாகப் பார்த்து, தென்னிந்தியாவிலிருந்து வருபவர்களைத் திகைக்கவைத்துக் கொண்டிருப்பதாகப் பட்சி சொல்கிறது. நிற்க, தங்கள் தொலைபேசி எண் கிடைக்காததால் தொடர்பு கொள்ள இயலவில்லை. எனது எண்தான் தங்களுக்குத் தெரிந்துவிட்டதே! பேசலாமே! திரு ஜிஎன்பி அவர்கள வரும்போது சந்திக்கத் தங்களுக்கு வசதிப்படுமா? தெரிவியுங்கள். அன்புடன்: இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

    பதிலளிநீக்கு
  16. படங்கள் அருமை சார், ஏன் நீங்கள் Flickrல் உங்கள் புகைப்படங்களை பதிவேற்றக் கூடாது?. நான் எடுத்த புகைப்படங்களை காண எனது பிளிக்கர் Link http://www.flickr.com/photos/greatmaba.

    பதிலளிநீக்கு
  17. //இன்று நான் எடுத்த (நானே எடுத்த!)//
    //(முதுகு என்னுடையது!)//

    இந்த ட்ரிக் எப்படி ஐயா? விளக்கம் ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு