வியாழன், ஏப்ரல் 18, 2013

நாமொரு பாதை இடுவோம், வா! (கவிதை)

நாளை என்பதை யாரறிவார்?
நன்மை என்பதை யாரறிவார்?
வாழ்க்கை என்பதை யாரறிவார்?
வாழ்ந்து பார்ப்போம், வா தோழா!
 

நேற்றும் முன்னும் நடந்ததெல்லாம்
நெஞ்சின் அறையில் தூங்கட்டும்!
நேரம் ஒன்றே நம்சொத்தாய்
நினைத்தே இன்று நடப்போம் வா!
 

ஒவ்வொரு நாளும் உன் கண்ணில்
உதிக்கும் கனவோ ஏராளம்!
இன்றதை விட்டால் நனவாக்க
இன்னொரு நாளும் கிடைத்திடுமா?
 

காலை விடிந்ததும் சூரியனும்
காகம் சேவல் பறவைகளும்
ஆலய மணியின் ஓசையதும்
அன்பாய் அழைப்ப(து) உனையன்றோ?
 

ஞாயிறு வந்தால் விடுமுறையும்
நலமிழந்தாலே விடுமுறையும்
ஊர்சுற்றிடவே விடுமுறையும்
உனக்கே எத்தனை விடுமுறைகள்!
 

கழனியில் இட்ட விதையாலே
கனிவரும் என்றே எதிர்பார்ப்பாய்!
உன்னை யிட்டவர் உன்னிடத்தில்
உழைப்பைக் கேட்டால் தவறாமோ?
 
அடுத்தவர் வகுத்த பாதையிலே
அன்றாடம்தான் நடக்கின்றோம்
நமக்கும் இளையவர் நடப்பதற்கே
நாமொரு பாதை இடுவோம், வா!

-    கவிஞர் இராய. செல்லப்பா, நியுஜெர்சி.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


9 கருத்துகள்:

  1. //வாழ்ந்து பார்ப்போம், வா தோழா!//

    unmai....

    பதிலளிநீக்கு
  2. //நேரம் ஒன்றே நம்சொத்தாய்
    நினைத்தே இன்று நடப்போம் வா!//

    Really true....

    பதிலளிநீக்கு
  3. //இன்றதை விட்டால் நனவாக்க
    இன்னொரு நாளும் கிடைத்திடுமா?//

    This is also really true...

    பதிலளிநீக்கு
  4. //அடுத்தவர் வகுத்த பாதையிலே
    அன்றாடம்தான் நடக்கின்றோம்
    நமக்கும் இளையவர் நடப்பதற்கே
    நாமொரு பாதை இடுவோம், வா!//

    Asaththalana varigal... sabash...

    Keep writing.... My wishes...

    பதிலளிநீக்கு
  5. அருமையான வரிகள்...

    சிறப்பாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  6. வெற்றி பாதையில் நடை போடுவோம்..

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை ஐயா !! இரசித்தேன் .... வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  8. சோம்பிக்கிடக்கும் இளைய தலைமுறைக்கு நற்படிப்பினையும் எழுச்சியும் ஊட்டும்படியானதொரு அருமையான கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    பதிலளிநீக்கு